Saturday 18th of May 2024 05:33:27 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா தொற்றால் இத்தாலியில் நான்காவது நபர் இன்று உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் இத்தாலியில் நான்காவது நபர் இன்று உயிரிழப்பு!


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்காவது நபர் இத்தாலியில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்தார்.

இத்தாலியின் வடக்கில் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

எனினும் அங்கு தொற்று பரம்பல் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரையான காலப்பகுதியில் அங்கு சுமார் 150 பேர் தொற்றுக்குள்ளாகி கண்டறியப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80 வயதான முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். இது இத்தாலியில் பதிவான நான்காவது உயிரிழப்பாகும்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே இறந்த மூன்று போரும் முதியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE